Tuesday, January 19, 2010

கையூட்டு (லஞ்சம்) - வாட்டிக்கொண்டிருக்கும் கொடுமை

மிகுந்த சிந்தனைக்கு பின் ஒரு உண்மை சம்பவம் ...

இந்த கையூட்டு பிரச்சனை எல்லா அரசு அலுவலகங்கிலும் இருக்கும். எல்லோரும் இதை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர்.

ஒரு நன்னாளில் தமிழக அரசு கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை நிறைவேற்றியது... அவ்வளவுதான் .. ஒவ்வொரு பதிவாளர் / சார்-பதிவாளர் மற்றும் பதிவாளர் அலுவலகத்தில் பனி புரியும் தலைமை கிளெர்க்கும் மிகுதியான மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டனர்.


காரணம் என்னவென்றால், திருமணபதிவுகளில் வரும் கையூட்டு. :-)

முறையல்லாத பத்திரப் பதிவுக்கு லஞ்சம் குடுத்து பழக்கி விட்டனர் மக்கள். இதே முறையில்.. முறையாக நடக்கும் திருமணங்களுக்கும் இந்த சமூகப் பேய்கள் லஞ்சம் கேட்டு வருகிறார்கள்.
அரசு பதிவாளர் அலுவலக நடைமுறை கண்டிப்பாக மாற்றப்படவேண்டிய ஒன்று !!! அந்த விடிவு காலம் எப்பொழுது ?

No comments: