http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_21.html
பாராட்ட பட வேண்டிய விஷயம்
இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக குஜராத் மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சிக்கான தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காதவர்கள், ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு மாத கெடுவிற்குள் விளக்க வேண்டும். காரணம் அரசாங்கத்தை திருப்திப்படுத்தாவிடில் அவர்கள் தண்டனையை சந்திக்க நேரிடும். இதுதான் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம். வழக்கம்போல் எதிரிக்கட்சிகளின், குறிப்பாகக் காங்கிரஸின் எதிர்ப்புக் கூக்குரலுக்கிடையே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment